மௌலானா ஆசாத் உதவித் தொகை: சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2015

மௌலானா ஆசாத் உதவித் தொகை: சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 11-ம் வகுப்பு படித்து வரும் சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி தொடர முடியாமல் சிரமப்படும் மாணவிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆசாத் கல்வி உதவித் திட்டம்செயல்படுத்தப்படுகிறது. இதில், பயனடைய தமிழகத்தில் வசித்து வரும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.நிகழாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி உதவித் திட்டத்தின் மூலம் 11-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும்,12-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும் என இரண்டு தவனைகளில் வழங்கப்படும். இக்கல்வி உதவித்தொகை, கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருள்கள் மற்றும் உண்டு உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது.இத்தொகையை பெற மாணவிகள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம். 10-ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நிகழாண்டில் அரசு அங்கிகாரம் பெற்ற பள்ளிகளில் 11-ம் படிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் பள்ளிசேர்க்கை அனுமதி சீட்டு நகல், ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதிமொழி ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை தாங்கள் பயில்கிறபள்ளியில் அளிக்க வேண்டும்.


இதை பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர் ஆகியோர் சரிபார்த்து கையொப்பம் செய்துthe secretary, maulana azad education fountation, (Ministry or Minority Afairs Government of India) cheims ford road, New Delhi- 110055 என்ற முகவரிக்கு வருகிற 30.9.2015-க்குள் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும்.அதேபோல், 2015-16ம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவி தொகை விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் www.maef.nic.in என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.


12-ம் வகுப்பு உதவித் தொகை பெற அம்மாணவிகள் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்கள் குறித்தும் மேற்படி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இக்கல்வி உதவித் தொகை பெற குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு சிறுபான்மையின மாணவிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி