மாணவனுக்கு பள்ளியில் தண்டனை அறிக்கை அளிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2015

மாணவனுக்கு பள்ளியில் தண்டனை அறிக்கை அளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் டி.பாப்பாங்குளம் தண்டபாணி மகன் வினோத் ஸ்ரீராம். திருப்புவனத்திலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.வட்டார தடகள போட்டியில் பங்கேற்க, இவருக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் பயிற்சி அளித்தார்.


பயிற்சியை சரியாக கவனிக்காததால் அதிக எடை உள்ள மாணவர் ஒருவரை முதுகில் துாக்கிக் கொண்டு ஓட வினோத்திற்கு உடற்கல்வி ஆசிரியர் உத்தரவிட்டார். இந்த தண்டனையால் வினோத் ஸ்ரீராமிற்கு கழுத்து பகுதிபாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மாணவனின் பெற் றோர் கலெக்டர் மலர்விழியிடம் புகார் கொடுத்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கோவிந்தராஜன் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வரிடம் நேற்று விசாரித்தார்.இதுகுறித்த அறிக்கையை மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் பிச்சைக்கு அனுப்பி வைக்கப்படும் என, ஆய்வாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி