Aug 7, 2015
Home
kalviseithi
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
பகுதி நேர ஆசிரியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, வாலாஜாபாதில் நடந்த சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அனைத்து ஆசிரியர்கள் போல் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளன்று ஊதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கடந்த 3 ஆண்டாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பயணப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள்
ReplyDelete