தொழிலாளர் நல வாரியத்தின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: அதிகாரி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2015

தொழிலாளர் நல வாரியத்தின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: அதிகாரி தகவல்

தொழிலாளர் நல வாரியத்தின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகர்கோவில்தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) க.ஞானசம்பந்தன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகள் பிளஸ் 1 முதல் முதுகலைப் பட்டம் வரை படிப்பவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வாங்குவதற்குநிதியுதவி அளிக்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரிஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற் பயிற்சி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.மேலும் 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.


இத்திட்டங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை 31.10.2015-க்குள் அனுப்ப வேண்டும்.நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தபால்பெட்டி எண்.718, தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் அனுப்பி வைக்க வேண்டும்என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி