கல்லூரிகளில் தொழிற்கல்வி துவங்க யு.ஜி.சி., அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2015

கல்லூரிகளில் தொழிற்கல்வி துவங்க யு.ஜி.சி., அனுமதி

தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க, தமிழகத்தில் ஐந்து கல்லுாரிகள் உட்பட, 49கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழு அனுமதி அளித்துள்ளது.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தொழிற்கல்வி படிப்புகளை தொடங்க, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.


நாடு முழுவதும் பல்கலை மற்றும் கல்லுாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பரிசீலனை முடிந்து, நாடு முழுவதும் 49 கல்லுாரி மற்றும் பல்கலை யில் தொழிற்கல்வி பட்டப்படிப்பு தொடங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், திருச்சி பிஷப் ஹெபர் கல்லுாரி (கணக்குப் பதிவு மற்றும் வரிக் கணக்கீடு), மதுரை லேடி டோக் கல்லுாரி (மருத்துவ சேவை மற்றும் மருத்துவ ஆய்வகதொழில்நுட்பம்), பெரியார் பல்கலை (துணிநுால் வடிவமைப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல்), சென்னை ஸ்டெல்லா மேரிஸ் (உணவு பதப்படுத்துதல் மற்றும் தர நிர்ணயம், நிலைக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை), விருதுநகர் இந்து நாடார் கல்லுாரி (சுற்றுச்சூழல் கணக்கீடு மற்றும் தீர்வு நடவடிக்கை) ஆகிய ஐந்து கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக, 7.9 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 16 கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 337கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு, தொழிற்கல்விக்கான அனுமதிமறுக்கப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி