சிலிண்டர் வாங்க இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2015

சிலிண்டர் வாங்க இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி துவக்கம்

சமையல் எரிவாயு உருளைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் தொடக்கி வைத்தார்.இதன் மூலம், இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் இனிமேல் புதிய சமையல் எரிவாயு உருளை இணைப்புகள் கோரி விண்ணபிக்கலாம்.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் 48 மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு, வாடிக்கையாளரின் வீட்டின் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த முகவர் 3 முதல் 4 நாட்களில் சமையல் எரிவாயு உருளையை அளிப்பார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் 2 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசுவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறினார்.​

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி