பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், பலவிதமான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெற, பள்ளி, கல்லுாரிகள் மூலமும், மத்திய அரசின் உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமும் விண்ணப்பிக்க வேண்டும்.'இன்ஜினியரிங் மற்றும் கலை கல்லுாரி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்லுாரிகளை, பல்கலைக் கழக மானியக்குழுவான - யு.ஜி.சி., வலியுறுத்தி உள்ளது.ஆனாலும், 'கல்வி உதவித்தொகை பெற, பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பங்களே அளிக்கவில்லை' என, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, ஆசிரி யர்கள் சிலர் கூறியதாவது:கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், பெற்றோரின் வருமான சான்றிதழை, மாணவர்கள் வாங்க வேண்டும். ஆனால், வருமான சான்றிதழ் வழங்க, வட்டாட்சியர் அலுவலகங்களில், நாள் கணக்கில் இழுத்தடிக்கின்றனர்.
பொது மின்னணு சேவை மையங்களுக்கு சென்றால், 'தினமும், எட்டு பேருக்கு மேல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வழியில்லை' என்று திருப்பி அனுப்புகின்றனர். இதனால், அலைக்கழிப்புக்கு ஆளாகும் மாணவர்கள், கல்வி உதவித்தொகையே வேண்டாம் என, விண்ணப்பமே அளிப்பதில்லை. எனவே, பள்ளிக்கல்வித் துறையும், உயர்கல்வித் துறையும், இந்த பிரச்னையில் தலையிட்டு, பள்ளி மற்றும் கல்லுாரிகளிலேயே, வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வது போன்று, வருமான சான்றிதழ் வழங்கும் சிறப்புமுகாம்களை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், பலவிதமான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெற, பள்ளி, கல்லுாரிகள் மூலமும், மத்திய அரசின் உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமும் விண்ணப்பிக்க வேண்டும்.'இன்ஜினியரிங் மற்றும் கலை கல்லுாரி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்லுாரிகளை, பல்கலைக் கழக மானியக்குழுவான - யு.ஜி.சி., வலியுறுத்தி உள்ளது.ஆனாலும், 'கல்வி உதவித்தொகை பெற, பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பங்களே அளிக்கவில்லை' என, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, ஆசிரி யர்கள் சிலர் கூறியதாவது:கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், பெற்றோரின் வருமான சான்றிதழை, மாணவர்கள் வாங்க வேண்டும். ஆனால், வருமான சான்றிதழ் வழங்க, வட்டாட்சியர் அலுவலகங்களில், நாள் கணக்கில் இழுத்தடிக்கின்றனர்.
பொது மின்னணு சேவை மையங்களுக்கு சென்றால், 'தினமும், எட்டு பேருக்கு மேல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வழியில்லை' என்று திருப்பி அனுப்புகின்றனர். இதனால், அலைக்கழிப்புக்கு ஆளாகும் மாணவர்கள், கல்வி உதவித்தொகையே வேண்டாம் என, விண்ணப்பமே அளிப்பதில்லை. எனவே, பள்ளிக்கல்வித் துறையும், உயர்கல்வித் துறையும், இந்த பிரச்னையில் தலையிட்டு, பள்ளி மற்றும் கல்லுாரிகளிலேயே, வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வது போன்று, வருமான சான்றிதழ் வழங்கும் சிறப்புமுகாம்களை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி