படிக்கட்டில் தொங்கும்மாணவர்களுக்கு 'அட்வைஸ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2015

படிக்கட்டில் தொங்கும்மாணவர்களுக்கு 'அட்வைஸ்'

'பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், அறிவுரை வழங்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு வழங்கும் பஸ் பாஸ் பயன்படுத்தி, அரசு பஸ்களில், பள்ளிகளுக்கு செல்கின்றனர்.


அப்படி செல்லும் போது, பல மாணவர்கள், பஸ்சின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.கடந்தசில வாரங்களாக, ஆங்காங்கே, வாகனங்களில் அடிபட்டு, மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.


இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு, ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கூறியுள்ளதாவது: பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், அறிவுரை வழங்க வேண்டும்.பஸ் நிறுத்தங்களில், மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு நிற்காமல், பஸ் வரும் போது ஒதுங்கி நிற்கும்படியும், ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி