ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2015

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம்

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-


* பள்ளிக்கூட நேரம் முடிந்ததும் மாணவ-மாணவிகள் நேராக வீட்டுக்கு செல்லவேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துதல்.


* கடல், குளத்தில் மாணவர்கள் குளிக்கக்கூடாது


* கடல், ஏரி, குளம், குட்டை ஆகிய எந்த நீர் நிலைகளிலும் மாணவ-மாணவிகளை குளிக்கக்கூடாது என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தவேண்டும்.


* பள்ளிக்கூடங்களில் புதர்கள், பழைய மரங்கள் விழும் நிலையில் இருந்தால் அவற்றைஅகற்றுதல்.


* மாணவ-மாணவிகள் நீர் நிலைகளுக்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.


* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தொட்டிகள், கழிவு நீர் தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் இருக்கவேண்டும். அவை மூடப்பட்டு இருக்கின்றனவா? என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்தல்.


* இடி, மின்னல் போன்றவற்றில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாக்க அவர்களைமரங்கள் அடியில் ஒதுங்கக்கூடாது என்று சொல்லுதல்.


* பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மின்சார சுவிட்சுகள் சரியாக உள்ளனவா? என்பதை தலைமை ஆசிரியர் சரிபார்க்கவேண்டும்.


* பழுதடைந்த மின் கம்பிகளை தொடக்கூடாது, பழுதடைந்த மின்கம்பங்கள் அருகே நிற்கக்கூடாது என்று மாணவ-மாணவிகளிடம் அறிவுறுத்துதல்.


* கூடிய மட்டும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இறை வணக்க கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு மேற்கண்ட அறிவுரைகளை வழங்கவேண்டும்.


இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. Very good circular of expert educationist in Education department.Till today nobody knows it

    ReplyDelete
  2. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி