மதுவிலக்கு ஆர்ப்பாட்டம்,போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுவதை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வலியுறுத்தி உள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனரகம் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க் களுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், “ மதுவிலக்கு அமல் கோரி பல்வேறு அமைப்பினர் நடத்தும் போராட்டங்களில் மாணவர்களைஈடுபடுத்தக்கூடாது. கல்வி நலனில் அக்கறை காட்ட வேண்டும். இது குறித்து தலைமை ஆசிரியர்கள், காலையில் நடக்கும் இறைவணக்க கூட்டத்திலும், வகுப்பாசிரியர்கள் பாட வகுப்பிலும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
இது பற்றிய கடித நகல்களை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி, ஒப்புகை பெறவேண்டும். ஒப்புகை நகலை சி.இ. ஒ.,க்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி