TNPSC : இரு துறைகளின் பணியிடங்களுக்கு ஆக.24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2015

TNPSC : இரு துறைகளின் பணியிடங்களுக்கு ஆக.24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், வேளாண் உதவி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளன.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு (117) கடந்த பிப்ரவரியில் தேர்வு நடைபெற்றது. அதில், 3,300 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 24 ஆம் தேதியன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

இதேபோன்று, தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணியில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு (417) கடந்த ஏப்ரலில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 3,236 பேர் எழுதினர். தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள், செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வானோரின் விவரங்கள் (www.tnpsc.gov.in) என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி