கல்விக் கடன் வட்டிக்கு 100 சதவீத மானியம்: வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க அக்டோபர் 6 வரை அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2015

கல்விக் கடன் வட்டிக்கு 100 சதவீத மானியம்: வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க அக்டோபர் 6 வரை அவகாசம்

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்கும் மாணவர்களின்கல்விக் கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங் கப்படுகிறது. இச்சலுகையைப் பெற, பெற்றோரின் வருமானச் சான்றிதழை அக்டோபர் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வருகின்றன.


2008-ல் 13 லட்சம் மாணவர்கள் கல்விக் கடன் பெற்றனர். இந்த எண்ணிக்கை 2014-ல் 25.60 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களது பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை 2009-ல் அறிவித்தது. மேலும், கடன் தொகையை திருப்பிச் செலுத்த மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்து ஒருவருடம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. படிப் புக் காலம் மற்றும் இந்த ஓராண்டு காலம் வரைமட்டுமே வட்டிக்கு 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.பெற்றோரின் வருமானம் குறித்து தாசில்தார் அளிக்கும் சான்றிதழை சமர்ப்பித்து, இச்சலுகையைப் பெறலாம். 2009 முதல் 2014 வரை வழங்கப்பட்ட கல்விக் கடனுக்கு இச்சலுகையைப் பெற மாணவர்கள் வருமானச் சான்றிதழை சமர்ப் பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.கல்விக் கடனுக்கான மானியத் தொகையை அனைத்து வங்கிகளுக் கும் அளிப்பதற்காக கனரா வங்கியை தொடர்பு வங்கியாக மத்திய அரசு நியமித்துள்ளது.


கனரா வங்கி அதிகாரிகள் கூறியபோது, ‘‘கல்விக் கடனுக்கான தொடர்பு வங்கியாக கனரா வங்கிநியமிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்விக் கடனுக்கான வட்டி மானி யத்தை மற்ற வங்கிகள் எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பல வங்கி கள் பெறாமல் உள்ளன. இத்தொகையை பெற்றுக்கொள்ள வங்கிகளுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2009-10ல் 43.85 சதவீத மானியமும், 2013-14ல் 16.63 சதவீத மானியமும் வழங்கியுள்ளது’’என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி