பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெற்றவர்களுக்கு நிதியுதவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2015

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெற்றவர்களுக்கு நிதியுதவி

2014-15 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல், இரண்டாம் மதிப்பெண் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், சார்ந்தோர்களின் குழந்தைகளில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில்மாநில அரசு பாடத் திட்டத்தில் 1200-க்கு 1180-க்கு மேலும், 1172-க்கு மேலும் மத்திய அரசு பாடத் திட்டத்தில் மேற்படி மதிப்பெண்களுக்கு மேல் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. எனவே, இத்தகுதியுள்ளவர்கள் மதிப்பெண் பட்டியலுடன் 25.9.2015 -ம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி