வங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2015

வங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு

வங்கி எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சென்னையில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டபணியாளர் நலச் சங்கம், "எம்பவர்' சமூக நீதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.


பயிற்சி வகுப்புகள் சென்னை பெரியார் திடலில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல்11-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.இதில் கலந்துகொள்ள விரும்புவோர் வங்கி தேர்வாணையத்துக்கு (ஐபிபிஎஸ்) அனுப்பிய விண்ணப்பித்தின் நகலை, "பொதுச் செயலாளர், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கம், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, எண் 139, பிராட்வே, சென்னை 600108' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஹண்ர்க்ஷஸ்ரீ.ஸ்ரீர்ஹஸ்ரீட்ண்ய்ஞ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தொடர்பாக மேலும் தகவல் பெற 9381007998, 9445174128, 9444993844, 9176075253 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி