மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு, 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டது.


அதனால், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், 113 சதவீதம், அகவிலைப்படியாக, ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர் மற்றும், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை, மேலும் 6 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், அடிப்படை சம்பளத்தில், 119 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். நாடு முழுவதும், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியர்களும், அகவிலைப்படி உயர்வால் பயன் பெறுவர். ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரை செய்த திட்டத்தின் கீழ், அகவிலைப்படி மாற்றியமைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி