ஏர்வாடி தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவுக்கு உள்பட்ட ஏர்வாடியில் உள்ள செய்யது அபுபக்கர் பாதுஷா நாயகத்தின் சந்தனக்கூடு திருவிழா வரும் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்யும் பொருட்டு வரும் 19.9.2015 அன்று சனிக்கிழமை பணிநாளாகக் கருதப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் அன்றைய தினம் செயல்பட வேண்டும்.இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வரும் 8.9.2015 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sep 2, 2015
Home
kalviseithi
செப்.8-இல் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
செப்.8-இல் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி