தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 8-ந்தேதி ஆசிரியர்கள், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2015

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 8-ந்தேதி ஆசிரியர்கள், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மாநில செயற்குழு


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் தியோடர் ராபின்சன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய முடிவெடுத்துள்ள தமிழக அரசை ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.


8-ந் தேதி வேலைநிறுத்தம்


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 8-ந் தேதி தமிழ்நாட்டில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் 24 ஆசிரியர் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ சார்பில் நடக்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

3 comments:

  1. U also neglected tet exam in ur 15n list request...

    ReplyDelete
  2. அவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டப்போ தொடர் வேலைநிறுத்தம் செஞ்சாங்க, ஆனா பாதிப்பு இளைய ஆசிரியர்களுக்கு மட்டுமென்று அடையாள வேலைநிறுத்தம் செய்யறாங்க.
    இன்னும் TETOJAC எவ்ளோகாலம்தான் ஏமாற்றுவார்கள்.

    ReplyDelete
  3. அவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டப்போ தொடர் வேலைநிறுத்தம் செஞ்சாங்க, ஆனா பாதிப்பு இளைய ஆசிரியர்களுக்கு மட்டுமென்று அடையாள வேலைநிறுத்தம் செய்யறாங்க.
    இன்னும் TETOJAC எவ்ளோகாலம்தான் ஏமாற்றுவார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி