B.Ed: பி.எட். படிப்பு 2 ஆண்டாக நீடிப்பு தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2015

B.Ed: பி.எட். படிப்பு 2 ஆண்டாக நீடிப்பு தமிழக அரசு அறிவிப்பு

பி.எட்.படிப்பு ஒரு ஆண்டில் இருந்து 2 ஆண்டாக தமிழ்நாட்டில் நீட்டிக்கப்பட்டுள்ளது.பி.எட்.படிப்புஇந்தியா முழுவதும் பி.எட்.படிப்பு ஒருவருடமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் 2 ஆண்டுகள் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் சில தனியார் பி.எட். கல்லூரிகள் நீதிமன்றத்தை நாடின.


இந்த நிலையில் தமிழக அரசு பி.எட்.படிப்பை ஒரு வருடத்தில் இருந்து 2 வருடமாக உயர்த்தியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அறிவித்தது.ஆனாலும் பி.எட்.படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கொடுப்பதில் தாமதம்ஏற்பட்டது. காரணம் கேட்டதற்கு பி.எட்.படிப்பு ஒருவருடமா? 2 வருடமா? என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்று பி.எட். கல்லூரிகள் தெரிவித்தன.


2 வருடம் என்று அறிவிப்பு


இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பி.எட்.படிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் சென்னை வெலிங்டன் சீமாட்டி பி.எட். கல்வியல் மேம்பாட்டு நிறுவனம் வழங்கி வருகிறது.


இந்த நிலையில் தமிழகத்திலும் பி.எட்.படிப்பிற்கான காலம் 2 ஆண்டுகள் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து பி.எட்.மாணவர் சேர்க்கை செயலாளர் ஆர்.பாரதி கூறியதாவது:–ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் பி.எட். படிப்பு ஒரு வருடத்தில் இருந்து 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே நடப்புகல்வி ஆண்டு முதல், பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகள் தலா 2 ஆண்டுகள் ஆகும்.


கலந்தாய்வு 28–ந்தேதி தொடங்குகிறது


பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு 28–ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை மாற்றுத்திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். பிற்பகல் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு நடத்தப்படும்.29–ந்தேதி கணிதப்பாடம் படித்தவர்களுக்கும், 30–ந்தேதி இயற்பியல், வேதியியல் பாடம் படித்தவர்களுக்கும், கலந்தாய்வு நடத்தப்படும். அக்டோபர் 1–ந்தேதி தாவரவியில், விலங்கியல் படித்தவர்களுக்கும், 3–ந்தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்தவர்களுக்கும், 5–ந்தேதி காலையில் வரலாறு, புவியியல், வணிகவியல் படித்தவர்களுக்கும் மாலையில் பொருளாதாரம்,மனை அறிவியல் படித்தவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.இது தொடர்பான அறிவிப்பு கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் வெளியிடப்படும். இவ்வாறு பாரதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி