வட்டி விகிதம் குறையுமா? ரிசர்வ் வங்கி நாளை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2015

வட்டி விகிதம் குறையுமா? ரிசர்வ் வங்கி நாளை அறிவிப்பு

புதுடில்லி;மத்திய அரசும், தொழில் துறையினரும் கொடுத்து வரும் அழுத்தத்துக்கு பணிந்து, ரிசர்வ் வங்கி, நாளை, வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பொருளாதாரம் மந்தமாகி வருவதால், உலகம் முழுவதும், பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடுகளிலும், பொருளாதார தேக்க நிலை காணப்படுகிறது.


இதனால், திணறிக் கொண்டிருக்கும் இந்திய தொழில் நிறுவனங்கள், வங்கி வட்டி விகிதத்தை குறைக்குமாறு, ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசும், வட்டி விகிதத்தை குறைக்க, ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் தந்து வருகிறது.இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி, நாளை, நிதிக் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, குறுகிய காலக்கடனுக்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைக்கும் என, வங்கித்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த வாரம், நிருபர்களிடம் பேசிய, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'பணவீக்க விகிதம், கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சூழ்நிலை யில், வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதே சரி' என, தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி