இதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுடன், பிரதமர் மோடி பேசினார். டில்லியில் இருந்தவாறு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நாட்டின் பல பகுதிகளிலுள்ள மாணவர்களின், கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.உருவாக்குவதில்...:நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:ஒருவர் உயிரை காப்பாற்றும் டாக்டர் பற்றி, பத்திரிகைகளிலும், பிற ஊடகங்களிலும் விரிவாக செய்தி வெளிவருகிறது. ஆனால், நுாற்றுக்கணக்கான டாக்டர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பற்றி செய்தி வருகின்றனவா? இல்லையே!அதற்காகத் தான், ஆசிரியர்களை நினைவு கூரும் வகையில், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானியின்பின்னணியிலும், ஆசிரியர் உள்ளார்.மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அதிகம். இளம் வயதில், மாணவர்களின் மனதில் அனைத்து விவரங்களும் எளிதாக பதியும். அதனால் தான், சிறு வயதில் படிக்கும் விஷயங்கள் கடைசி காலம் வரை நினைவில் நிற்கிறது. எனவே, மாணவர்களுக்கு நல்லனவற்றை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஒரு சிறந்த ஆசிரியராக அனைவராலும் நினைவு கூரப்படுகிறார். பள்ளிகளில், மாணவர்களுக்கு, 'காண்டக்ட், கேரக்டர் சர்ட்டிபிகேட்' எனப்படும் நடத்தை சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதை, கேரக்டர் மற்றும் ஆப்டிடியூட் எனப்படும், நடத்தையுடன் திறன் சான்றிதழாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். நடத்தையும், திறனும் மாணவர்களுக்கு அவசியம்.அடுத்த ஏழாண்டிற்குள், நாடு முழுக்க, 24 மணி நேரமும் மின் வினியோகிக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். மின்சாரம் இல்லாத, 18 ஆயிரம் கிராமங்களுக்கு, அடுத்த, 1,000 நாட்களில் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது இலக்கு.
புதுடில்லி: ''டாக்டர்கள், இன்ஜினியர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர், வாரத்தில்ஒரு மணி நேரமாவது, மாணவர்களுக்கு பாடம் எடுத்து, தங்களுக்கு தெரிந்த நல்ல தகவல்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு அடையும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.இன்று, ஆசிரியர் தினம். நாட்டின் இரண்டாவது ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்ததால், அவர் நினைவைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ம் தேதி, 'ஆசிரியர் தின'மாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுடன், பிரதமர் மோடி பேசினார். டில்லியில் இருந்தவாறு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நாட்டின் பல பகுதிகளிலுள்ள மாணவர்களின், கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.உருவாக்குவதில்...:நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:ஒருவர் உயிரை காப்பாற்றும் டாக்டர் பற்றி, பத்திரிகைகளிலும், பிற ஊடகங்களிலும் விரிவாக செய்தி வெளிவருகிறது. ஆனால், நுாற்றுக்கணக்கான டாக்டர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பற்றி செய்தி வருகின்றனவா? இல்லையே!அதற்காகத் தான், ஆசிரியர்களை நினைவு கூரும் வகையில், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானியின்பின்னணியிலும், ஆசிரியர் உள்ளார்.மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அதிகம். இளம் வயதில், மாணவர்களின் மனதில் அனைத்து விவரங்களும் எளிதாக பதியும். அதனால் தான், சிறு வயதில் படிக்கும் விஷயங்கள் கடைசி காலம் வரை நினைவில் நிற்கிறது. எனவே, மாணவர்களுக்கு நல்லனவற்றை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஒரு சிறந்த ஆசிரியராக அனைவராலும் நினைவு கூரப்படுகிறார். பள்ளிகளில், மாணவர்களுக்கு, 'காண்டக்ட், கேரக்டர் சர்ட்டிபிகேட்' எனப்படும் நடத்தை சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதை, கேரக்டர் மற்றும் ஆப்டிடியூட் எனப்படும், நடத்தையுடன் திறன் சான்றிதழாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். நடத்தையும், திறனும் மாணவர்களுக்கு அவசியம்.அடுத்த ஏழாண்டிற்குள், நாடு முழுக்க, 24 மணி நேரமும் மின் வினியோகிக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். மின்சாரம் இல்லாத, 18 ஆயிரம் கிராமங்களுக்கு, அடுத்த, 1,000 நாட்களில் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது இலக்கு.
இதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுடன், பிரதமர் மோடி பேசினார். டில்லியில் இருந்தவாறு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நாட்டின் பல பகுதிகளிலுள்ள மாணவர்களின், கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.உருவாக்குவதில்...:நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:ஒருவர் உயிரை காப்பாற்றும் டாக்டர் பற்றி, பத்திரிகைகளிலும், பிற ஊடகங்களிலும் விரிவாக செய்தி வெளிவருகிறது. ஆனால், நுாற்றுக்கணக்கான டாக்டர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பற்றி செய்தி வருகின்றனவா? இல்லையே!அதற்காகத் தான், ஆசிரியர்களை நினைவு கூரும் வகையில், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானியின்பின்னணியிலும், ஆசிரியர் உள்ளார்.மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அதிகம். இளம் வயதில், மாணவர்களின் மனதில் அனைத்து விவரங்களும் எளிதாக பதியும். அதனால் தான், சிறு வயதில் படிக்கும் விஷயங்கள் கடைசி காலம் வரை நினைவில் நிற்கிறது. எனவே, மாணவர்களுக்கு நல்லனவற்றை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஒரு சிறந்த ஆசிரியராக அனைவராலும் நினைவு கூரப்படுகிறார். பள்ளிகளில், மாணவர்களுக்கு, 'காண்டக்ட், கேரக்டர் சர்ட்டிபிகேட்' எனப்படும் நடத்தை சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதை, கேரக்டர் மற்றும் ஆப்டிடியூட் எனப்படும், நடத்தையுடன் திறன் சான்றிதழாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். நடத்தையும், திறனும் மாணவர்களுக்கு அவசியம்.அடுத்த ஏழாண்டிற்குள், நாடு முழுக்க, 24 மணி நேரமும் மின் வினியோகிக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். மின்சாரம் இல்லாத, 18 ஆயிரம் கிராமங்களுக்கு, அடுத்த, 1,000 நாட்களில் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது இலக்கு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி