சண்டிகர்:அரசு மற்றும் பொது விழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில், பள்ளி மாணவர்கள் பங்கேற்பதற்கு, அரியானா மாநில அரசு தடை விதித்துள்ளது.அரியானா மாநிலத்தில், பா.ஜ., கட்சியின் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆட்சி நடக்கிறது.
இங்கு, சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் மற்றும் முதல்வர், அமைச்சர் கள் பங்கேற்கும் விழாக்களில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சில தினங்களுக்கு முன், முதல்வர் கட்டார் கலந்து கொண்ட ஒரு விழாவில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம், சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த மாணவர்கள், வெறும் காலுடன், கலை நிகழ்ச்சி யில் பங்கேற்றனர். இதைப் பார்த்த முதல்வர், அரசு மற்றும் பொது விழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில், பள்ளி மாணவர்கள் பங்கேற்க உடனே தடை விதித்தார். கலை நிகழ்ச்சிகளில், மாணவர்கள் கலந்து கொள்ள வற்புறுத்தக்கூடாது என, பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.முதல்வரின் இந்த உத்தரவை கேட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sep 5, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி