"ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளில் தமிழ் பாடத் திட்டத்தை மேம்படுத்தநடவடிக்கை' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2015

"ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளில் தமிழ் பாடத் திட்டத்தை மேம்படுத்தநடவடிக்கை'

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்ப் பாடத் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.எஸ்.சி.இ. பள்ளி கவுன்சிலின் தலைமைச் செயலாளர் ஜெர்ரி அராத்தூன் கூறினார்.


வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழா, கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:மாணவர்களின் அறிவாற்றலையும்,கல்வித் திறனையும் மேம்படுத்தும் வகையில் பாடத் திட்டம், கற்பிக்கும் முறை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த பாடத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள செய்முறை மாதிரிகளை அவர்களாக செய்து காட்ட ஊக்குவிக்க வேண்டும். சந்தையில் கிடைக்கும் மாதிரிகளை மாணவர்கள் வாங்கி வந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பப்படிப்புகளுக்கு மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறையைக் காரணம் காண்பித்து, பாடத் திட்டத்தின் தரத்தைக் குறைக்க முடியாது. பாடத் திட்டத்தில் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளைச் சேர்க்க பரிசீலிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி