சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2015

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறவிண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் வரும் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.9-ம் வகுப்பு முதல் பிஎச்டி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர்ஆன்லைன் மூலம் அக்டோபர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி