தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2015

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தல்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அந்தச் சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.


மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சேகர், மண்டல செயலர் டி.செல்வம், மாவட்ட அமைப்பு செயலர் கே.அருண்குமார், மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ்.ஞானசிகாமணி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், நிகழ் கல்வியாண்டில் (2015-16) தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும். கூடுதலாக உருவாக்கப்படும்பணிடங்களை முறையான கலந்தாய்வின் மூலம் நிரப்ப வேண்டும். அனைத்து தாற்காலிகபணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைமையிடச் செயலர்எம். முருகன், மாவட்டத் துணைத் தலைவர் க.காவேரி, செய்தித் தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி