பி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் இன்று துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2015

பி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் இன்று துவக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிக் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கையை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.


இந்த ஆண்டு, 1,750 இடங்களுக்கு, 7,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்கின்றனர்.நாளை கணிதம், நாளை மறுநாள் இயற்பியல் மற்றும் வேதியியல், அக்., 1ம் தேதி தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.அக்., 3ம் தேதிதமிழ், ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல், அக்., 5ம் தேதி வரலாறு, புவியியல்,வணிகவியல், பொருளாதாரம் மற்றும் 'ஹோம் சயின்ஸ்' என்ற மனை அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி