சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு, இலவசப் பயிற்சி பெற, தமிழகஅரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், நுழைவுத்தேர்வு அறிவித்துள்ளது.ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ்பதவிகளுக்கு, 2016ல், தேர்வில் எழுதுவோருக்கு, தமிழக அரசு இலவச பயிற்சி அளிக்கிறது.
சென்னை, அண்ணா மேலாண்மை நிறுவனத்திலுள்ள, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், 225 பேர் விடுதியில் தங்கி படிக்கவும், 100 பேர் வெளியிலிருந்து வந்து, பகுதி நேரமாக பயிற்சி பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கான நுழைவுத்தேர்வு, நவ., 22ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் சேர விரும்புவோர், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில், சான்றிதழ்களின் நகல்களைக் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.சென்னையில் வசிப்பவர்கள், ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அகில இந்தியக் குடிமைப் பணி தேர்வு மையப் பயிற்சி மையத்தில் விண்ணப்பம் பெறலாம். மேலும், விவரங்களை, www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை, அண்ணா மேலாண்மை நிறுவனத்திலுள்ள, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், 225 பேர் விடுதியில் தங்கி படிக்கவும், 100 பேர் வெளியிலிருந்து வந்து, பகுதி நேரமாக பயிற்சி பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கான நுழைவுத்தேர்வு, நவ., 22ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் சேர விரும்புவோர், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில், சான்றிதழ்களின் நகல்களைக் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.சென்னையில் வசிப்பவர்கள், ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அகில இந்தியக் குடிமைப் பணி தேர்வு மையப் பயிற்சி மையத்தில் விண்ணப்பம் பெறலாம். மேலும், விவரங்களை, www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி