இளைஞர் எழுச்சி நாள்: அரசு சார்பில் இன்று விழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2015

இளைஞர் எழுச்சி நாள்: அரசு சார்பில் இன்று விழா

குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த தினத்தை ஒட்டி, தமிழக அரசு சார்பில் இளைஞர் எழுச்சி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ஆம் தேதி, தமிழகத்தில் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.


இந்த தினத்தை ஒட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.இதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.இந்த விழாவில் அமைச்சர்கள் பி.பழனியப்பன், எஸ்.சுந்தரராஜ், கே.சி.வீரமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி