பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2015

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

பதவி உயர்வு பெற்று 8 ஆண்டுகளாகிய பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்கள் கழக மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில், பதவி உயாóவு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியாóகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக பதவிஉயாóவு உள்ளிட்ட பயன்கள் வழங்கவில்லை. எனவே அரசு அவாóகளுக்கு உயாóநிலை தலைமையாசிரியர் மற்றும்முதுநிலை ஆசிரியர் பதவி உயாóவில் 50 சதவீதம் வழங்க வேண்டும். இதேபோல மேல்நிலை தலைமையாசிரியர் பதவி உயாóவில் அரசாணை 720ஐ பயன் படுத்தி முதுநிலை ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் உயாóநிலை ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் வழங்க வேண்டும். அக். 8ஆம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்கள் சங்கம் கூட்டு இயக்கம் (ஜேக்டோ) சார்பில் நடைபெறவுள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பதவி உயாóவு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில சிறப்புத் தலைவர் அண்ணாமலை, மாநிலபொதுச் செயலர் பெனின் தேவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி