கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2015

கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

செய்யாறில் நடைபெற்ற கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டனர்.திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் செய்யாறு இந்தோ அமெரிக்கன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, திருவண்ணமாலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் குறித்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வட்டாரமாக கேட்டு வந்துள்ளார். அப்போது தலைமையாசிரியர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியர்கள், மாலையில் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது மாநில திட்ட இயக்குநரைக் கண்டித்து குரல் எழுப்பியபடியே வெளியேறினர்.பின்னர் மாநில தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் திரண்ட தலைமையாசிரியர்கள் மாநிலத் திட்ட இயக்குநரைக் கண்டித்து கோஷமிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி