வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றவிண்ணப்பித்தவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:


வாக்காளர் பட்டியல் திருத்தம், செப்டம்பரில் துவங்கியது; 24ல் முடிந்தது. மூன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மொத்தம், 22.81 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பெயர் சேர்க்க, தொகுதி மாற்றம் செய்ய, 16.94 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து, பெயர் சேர்க்க கோரி, 11 விண்ணப்பம் வந்துள்ளன.பெயரை நீக்க, 1.76 லட்சம்; திருத்த, 2.69 லட்சம்; வார்டு மாற்ற, 1.41 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 7.50 லட்சம் பேர் மட்டும், மொபைல் எண் கொடுத்துள்ளனர்.இவர்களின் விவரம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விண்ணப்பங்களும், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இரண்டையும் ஆய்வு செய்து, தவறு இருந்தால் திருத்தம் செய்யப்படுகிறது. இப்பணி பெரும்பாலான மாவட்டங்களில் நிறைவு பெற்று உள்ளது;சென்னையில் மட்டும், 75.38 சதவீத பணி முடிந்துள்ளது.இந்த விவரம், விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம், தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் பெயர், வேறு எங்கும் உள்ளதா என ஆய்வுசெய்யப்படுகிறது. பின், அந்த விண்ணப்பதாரர் பெயரில், 'செக் லிஸ்ட்' தயார் செய்யப்படுகிறது.ஓட்டுச்சாவடி அலுவலர், அந்த விண்ணப்பதாரர் வீட்டுக்கு சென்று, செக் லிஸ்ட் தகவல் உண்மையா என ஆய்வு செய்வார். அவர் வரும் தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். அப்போது, மொபைல் எண் கொடுக்காதவர்களிடம், எண்ணை கேட்டு பெறுவார், என்று சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.


பெயர் விடுபடும் பிரச்னை தீரும்

'கடந்த தேர்தலில் ஓட்டு போட்டேன்; இப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை' என, ஒவ்வொரு தேர்தலிலும் புகார் எழுவது வாடிக்கை.இதை தவிர்க்க, தேர்தல் பிரிவு அலுவலர்கள், புதிய மென்பொருளை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை, அதிகாரிகள் தன்னிச்சையாக நீக்க முடியாது. நீக்கத்திற்கான காரணத்தை, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே, நீக்கம் செய்ய முடியும்.இதன்மூலம், ஒருவடைய பெயர், எதற்காக நீக்கப்பட்டது; நீக்கியது யார்; பரிந்துரை செய்தது யார் போன்ற விவரங்களை, கம்ப்யூட்டர் மூலம் அறிய முடியும்.எனவே, மொத்தமாக பெயர் நீக்கம் செய்வது தடுக்கப்படும்; அப்படி செய்தால், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்; எனவே, இனி பெயர் விடுபடும் பிரச்னை தீரலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி