மாவட்ட படைவீரர் நல அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2015

மாவட்ட படைவீரர் நல அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலக உதவியாளர் பணிக்கு, தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.தற்போது இந்தப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அந்த பணியிடத்துக்கு முன்னுரிமையற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, தமிழ்வழி கல்வி பயின்ற, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மகளிர் விண்ணப் பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 2015,அக்டோபர் 1-ன் படி, 30 வயது இருக்க வேண்டும் (அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).


விண்ணப்பிக்க விரும்புவோர், சுய விவரம் மற்றும் புகைப்படத்து டன் வரும் 30-ம் தேதிக்குள், ‘உதவி இயக்குநர், மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகம், 6/25 லால்பகதூர் சாஸ்திரி சாலை, பெரியகுப்பம், திருவள் ளூர்-602001’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி