இன்னும் 2 நாள் மழை உண்டு: மிரட்டுகிறது அடுத்த புயல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2015

இன்னும் 2 நாள் மழை உண்டு: மிரட்டுகிறது அடுத்த புயல்

உருவாகியுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


வங்கக் கடலின்தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே கடல் பரப்பில் இருந்து 1.5 கி.மீ. உயரத்தில் காற்று அழுத்த சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதே போல்அந்தமான் கடல் பகுதியில் கடல் பரப்பில் இருந்து 3.1 கி.மீ. உயரத்தில் காற்று மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை குறைந்த காற்று அழுத்த தாழ்வாக மாறி நாளை தீவிரமடையும்.இதனால் தமிழகம் புதுச்சேரியில் இன்று, நாளை கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது. குறைந்த காற்று அழுத்த தாழ்வு தீவிரமடையும் போது நவ. 27ம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும்; மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யும்.நேற்று காலை 8:30 மணி வரை அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசம் - 18; காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் - 17; சென்னை - 16; திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி - 13 செ.மீ. மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி