இறுதி வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியீடு : தேர்தல்அலுவலர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2015

இறுதி வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியீடு : தேர்தல்அலுவலர் அறிவிப்பு

தமிழகத்தில் பெயர் சேர்த்தல் திருத்தம் குறித்த வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தபட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடு தோறும் சோதனைக்கு வரும் வாக்கு சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்.


இது குறித்து மாநில தேர்தல் அலுவலர் அறிவிப்பு:தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2016ம் ஆண்டு வருகிறது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரிபார்த்து வெளியிட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுதும் பல்வேறு முகாம்களை நடத்தி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. இதற்காக முகாம்களில் பொதுமக்கள் பெயர் சேர்த்தல் , நீக்கம், மாற்றம், விலாச மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்பு ஆகியவற்றுக்காகபடிவங்கள் வழங்கப்பட்டது.இதனடிப்படையில் இறுதி படிவங்கள் கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 24 வரை பெறப்பட்டது. மேலும் எஸ்.எம்.எஸ், ஈமெயில் மூலமும் பெறப்பட்ட விபரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.


இதற்கான இறுதிகட்ட ஆய்வை மேற்கொள்ள வாக்கு சாவடி அதிகாரிகள் வீடுதோறும் வர உள்ளனர்.அவர்களுக்கு வாக்காளர்கள் ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுகொள்கிறோம்.மேலும் இதற்கான விபரங்களை தேர்தல் ஆணைய இணையதளமான election.tn.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம். மேலும் வாக்காளர்கள் தங்கள் செல்போன் எண்களை அளித்தால் அவ்வப்போதைய தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி