அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2015

அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக நவம்பர் - டிசம்பர் பருவத் தேர்வுகள் தற்போதுநடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில், தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமையன்று ஒரு நாள் தேர்வுகளை மட்டும் பல்கலைக்கழகம் ஒத்திவைத்து அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறியது:தொடர் மழை காரணமாக பல்கலைக்கழக துறைகளுக்கும், இணைப்புக் கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை நடத்தப்பட இருந்த தேர்வுகள் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.இந்தத் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மற்ற நாள்களில் நடக்க உள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி