மழை விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் செய்யப் போவது என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2015

மழை விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் செய்யப் போவது என்ன?

சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பொதுவாகவே, எதிர்பாராத விடுமுறைகளை ஈடுகட்ட, பள்ளிகள் சனிக்கிழமைகளில்இயங்குவது வழக்கம்.


ஆனால், பள்ளிகளில் சிறார்களுக்கான வகுப்புகளுக்குபொதுவாக சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்துவது இல்லை. ஆனால், இந்த அளவுக்கு விடுமுறையை ஈடுகட்ட வேண்டும் என்றால், எல்கேஜி மற்று யுகேஜிவகுப்புகளுக்கும் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.சனிக்கிழமைகளில் அரைநாள் பள்ளியை நடத்தும் வழக்கத்தை மாற்றி இனி முழுநாள் பள்ளியாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், அரையாண்டு விடுமுறையை தாமதமாகத் துவக்கி, 10 முதல் 15 நாட்கள் விடப்படும் விடுமுறையை ஓரிரு நாட்களாகக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.


சில பள்ளிகளில், அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு எந்த சுற்றுலாப் பயணத் திட்டத்தையும் வகுத்துக் கொள்ள வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.சில பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, பள்ளி இயங்கும்நேரத்தை கூடுதலாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.எது எப்படி இருந்தாலும், பள்ளிச் செல்லும் சிறார்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், மாலை நேரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் செய்தியாக இருப்பது, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா என்பதே..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி