மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2015

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்.

மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு (casual leave) எடுக்கும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.மத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய 4 அமைப்புகளின் தொகுப்பான ரிசர்வ் வங்கி அதிகாரிகள்மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு நவம்பர் 19-ம் தேதி தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.


இதனை அனைத்திந்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு தலைமைச் செயலர் சமீர் கோஷ் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிதிக் கொள்கைக்கான கமிட்டியை அமைத்து, இதுவரை மத்திய ரிசர்வ் வங்கி மட்டுமே கவனித்து வந்த நிதிக்கொள்கையில் தலையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனை எதிர்த்து இந்த போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.ஆர்.பி.ஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், வரைவு நிதிச் சட்டம் மற்றும் சில சீர்திருத்த சட்டங்கள் மூலம் மத்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முடக்க நினக்கும் மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கவே இந்த வேலை நிறுத்த அறிவிப்பு. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி