குறைந்த காற்றழுத்தம் ஆந்திரா நோக்கி நகர்கிறது: தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2015

குறைந்த காற்றழுத்தம் ஆந்திரா நோக்கி நகர்கிறது: தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–


நேற்று தென் மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கையையொட்டி நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தின் வட எல்லையில் நீடிக்கிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.


குறிப்பாக வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் சில இடங்களிலும் மழை பெய்யும். தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராசெல்ல இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்த வட கிழக்கு பருவ மழை இதுவரை 38 செ.மீ. பெய்துள்ளது. சென்னையில் 85 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 91 செ.மீ. மழை இதுவரை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி