கடலூரில் நாளையும் பள்ளி -கல்லூரிகளுக்கு விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2015

கடலூரில் நாளையும் பள்ளி -கல்லூரிகளுக்கு விடுமுறை.

கடலூரில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


கடலூர்


வங்க கடலில் உருவாகி இருந்த புயல் சின்னம் கடந்த 8ந் தேதியில்இருந்து கடலூர்விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே கரையை கடந்து நிலப் பகுதிக்கு வந்தது. அப்போது மிக பலத்த மழை பெய்தது.


இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடானது. ஒரு லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் கடலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உள்ளன. 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் துண்டிக்கபட்டு உள்ளது.கடலூர் மாவட்டத்தில் கன மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது‘பண்ருட்டியில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியானர்கள் இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியான சோகம். கடலூர் மாவட்டத்தில் 189 கால்நடைகள் உயிரிழந்தன. 5 ஆயிரம் வீடுகள்சேதம் அடைந்தன.கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை யினால் பாதிக்கப்பட்ட நகர்புறங்கள், கிராம புறங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முகாமில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ள பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


பலத்த மழை, வெள்ளம் காரணமாக கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


கடலூர் மாவட்டத்தில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி