காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2015

காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தற்போது, வடதமிழகம் அருகே நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை முன்னறிவிப்பு எதிரொலியாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி