பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் டிச.,24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2015

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் டிச.,24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் வரும் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.நேரடி தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1, மொழிப் பாடத்தில் தமிழ் பாடத்தை மட்டுமே முதல் மொழி பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும். நேரடி தனித் தேர்வர்கள் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


9-ம் வகுப்பு படித்து படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களும், 8-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.இதுதவிர அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் படித்து 8-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று சான்றிதழ் பெற்றவர்கள், உண்டு உறைவிடப் பள்ளி, பள்ளி சாரா கல்வித் திட்டத்தின் கீழ், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிப்பவர்களுக்கு 1.4.2016-ஆம் தேதி அன்று வயது 14 ஆண்டு 6 மாதங்கள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும், 10-ஆம் வகுப்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர்கள், தாங்கள் தோல்வியடைந்த பாடங்களை மட்டும் தற்போது உள்ள பாடத்திட்டத்தில் எழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு எழுதிய பின்னரே கருத்தியல் தேர்வு எழுத வேண்டும்.


எனவே, தகுதியுடையவர்கள் அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். இங்கு பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.இதில், குறிப்பிடப்பட்டுள்ள எண்ணைப் பயன்படுத்தி தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி