திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் - கோரிக்கை வலுக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2015

திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் - கோரிக்கை வலுக்கிறது.

திருச்சியை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.திருச்சியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:


சென்னை, புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மக்கள்தொகை பெருக்கம் போன்ற காரணங்களால், இனி அங்கு கட்டடங்கள் கட்ட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.மாநிலத்தின் மையப் பகுதி, சர்வதேச விமான நிலையம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஏறத்தாழ 1000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், வேளாண், இயற்கை வளங்கள் உள்ள நிலையில், திருச்சியை மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். வேளாண் உள்ளிட்ட முக்கியத் துறை அலுவலகங்களின் தலைமை அலுவலகத்தை திருச்சிக்கு மாற்ற வேண்டும்.ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். 2016, பிப்ரவரி மாதத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம். ஜனவரிக்குப் பிறகு எங்களுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் வர உள்ளன என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி