சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2015

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதர தீர்மானங்கள்:


சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், கல்வி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பொருத்தமானத் துறைகளில் மாற்றுப் பணிகளை வழங்க வேண்டும், அரசால் உறுதியளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ள பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.மாநில சங்க நிர்வாகிகளை அழைத்து தமிழக முதல்வரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும், போராட்டக் காலங்களில் காவல்துறையினரை வைத்து அச்சுறுத்துவதும், தடியடி நடத்துவதும் போன்ற ஜனநாயக விரோதச் செயல்களை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி