சத்துணவு ஊழியர் போராட்ட அறிவிப்பு 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2016

சத்துணவு ஊழியர் போராட்ட அறிவிப்பு 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து

சத்துணவு ஊழியர்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை நிர்வாகம் ரத்து செய்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர். சிலருக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.பின் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில், சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கை டிச., 28 க்குள் ரத்து செய்யப்படும்என, மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. காலக்கெடு முடிந்தும் நடவடிக்கை இல்லை. ஜன., 8 ல் திருப்பூரில் நடக்கும் மாநில மாநாட்டிற்குள் நடவடிக்கை இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் பள்ளிமாணவர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்படும் என, சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது.இதையடுத்து முதற்கட்டமாக 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.


சத்துணவு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.முருகேசன் கூறியதாவது: ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து செய்ததை வரவேற்கிறோம். ஜன., 8 க்குள் 4பேரின் 'சஸ்பெண்ட்' உத்தரவும், 17 பேரின் இடமாறுதலும் ரத்து செய்யப்படும் என, நிர்வாகம் உறுதியளித்துள்ளது. நிறைவேற்றாவிட்டால் அறிவித்தப்படி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி