ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால், நாளை நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்துவதில் சிக்கல் உருவாகியுள்ளது.ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி, 30, 31, பிப்ரவரி, 1 ஆகிய தேதிகளில், மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடத்தி போராட முடிவு செய்துள்ளது.
இதனால், இம்மூன்று தினங்களில் ஏராளமான ஆசிரியர்கள் பணிக்கு செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், நாளைகாலை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரும் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யவும், பெயர் சேர்க்கவும் இது கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.
இவற்றில் விண்ணப்பம் பெறவும், சரிபார்க்கவும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் இடங்களில், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்துவதில் சிக்கல் ஏற்படும். இதற்கான மாற்று ஏற்பாடுகளோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ எடுக்காத பட்சத்தில், பல இடங்களில் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகும்.
Jan 30, 2016
Home
kalviseithi
ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: வாக்காளர் சிறப்பு முகாம் நடக்குமா?
ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: வாக்காளர் சிறப்பு முகாம் நடக்குமா?
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி