சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்கிய கிரீன் கோல்ட் அனிமேஷன் நிறுவனத்துடன், படக்கதையுடன் புத்தகங்கள் வெளியிடும் நிறுவனமான டார்லிங் கின்டர்ஸ்லே கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி, சோட்டா பீம் கதாபாத்திரம் இடம்பெறும் வகையில் 12க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த புத்தகங்களில் விளையாட்டாக ஆங்கிலம்கற்கவும், அதே வகையில் கணிதம் கற்கவும் ஏற்ற வகையில் கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு தனியாகவும், 5 முதல் 7 வயது வரையானவர்களுக்கு தனியாகவும் இந்த புத்தகங்கள் தயாராகி வருகின்றன. இது தவிர, குழந்தைகள் கற்றுக் கொள்ள ஏற்ற வகையில் எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் கொண்டதாக 104 பக்க அளவில் சோட்டா பீமும், நானும் என்ற பெயரிலும் ஒரு புத்தகம் தயாராகி வருவதாக தெரிகிறது.சோட்டா பீம் கதாபாத்திரம் தொடர்பான முழுமையான பின்னணி கொண்ட தகவல் களஞ்சியம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாக இந்த கூட்டு நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்கிய கிரீன் கோல்ட் அனிமேஷன் நிறுவனத்துடன், படக்கதையுடன் புத்தகங்கள் வெளியிடும் நிறுவனமான டார்லிங் கின்டர்ஸ்லே கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி, சோட்டா பீம் கதாபாத்திரம் இடம்பெறும் வகையில் 12க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த புத்தகங்களில் விளையாட்டாக ஆங்கிலம்கற்கவும், அதே வகையில் கணிதம் கற்கவும் ஏற்ற வகையில் கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு தனியாகவும், 5 முதல் 7 வயது வரையானவர்களுக்கு தனியாகவும் இந்த புத்தகங்கள் தயாராகி வருகின்றன. இது தவிர, குழந்தைகள் கற்றுக் கொள்ள ஏற்ற வகையில் எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் கொண்டதாக 104 பக்க அளவில் சோட்டா பீமும், நானும் என்ற பெயரிலும் ஒரு புத்தகம் தயாராகி வருவதாக தெரிகிறது.சோட்டா பீம் கதாபாத்திரம் தொடர்பான முழுமையான பின்னணி கொண்ட தகவல் களஞ்சியம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாக இந்த கூட்டு நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி