கம்ப்யூட்டர் தெரிந்தால் தான் இனி மத்திய அரசு வேலை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2016

கம்ப்யூட்டர் தெரிந்தால் தான் இனி மத்திய அரசு வேலை!

அரசு பணிகளில், எழுத்தர்களுக்கு பதில், நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த, நிர்வாக உதவியாளர்களை பணியில் சேர்க்க,மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில், எல்.டி.சி., எனப்படும், கீழ்நிலை எழுத்தர், யூ.டி.சி., எனப்படும், உயர்நிலை எழுத்தர் பணிகள் உள்ளன. மத்திய அரசின் செயலக பணிகளின் முதுகெலும்பாக இப்பணியாளர்கள் திகழ்கின்றனர்.


இவர்களுக்கு பதில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த இளைஞர்களை, நிர்வாக உதவியாளர் பணியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அடுத்த, 25 ஆண்டுகளில், இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.


டில்லியில் உள்ள, மத்திய தலைமைச் செயலகத்தில், 21 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அரசின் புதிய திட்டத்தால், ஊழியர் எண்ணிக்கை, 8,200ஆக குறையும்.நிர்வாக உதவியாளர்கள், பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்படுவர்; ஆறு ஆண்டு பணிக்கு பின், நிர்வாக அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவர். இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், மத்திய அரசு பணியாளர்கள், அனைத்து வித தொழில் திறன்களையும் கொண்டவர்களாக விளங்குவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி