அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2016

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

கேரளாவில் அரசு ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது. கேரளாவில் சம்பள உயர்வு கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து சம்பள உயர்வு குறித்து ஆலோசிப்பதற்காக கேரளஅரசு ஒரு கமிஷனை நியமித்தது. இந்த கமிஷன் சமீபத்தில் தனது அறிக்கையை முதல்வர் உம்மன்சாண்டியிடம் தாக்கல் செய்தது.


பின்னர்இந்த அறிக்கையை அமைச்சரவை துணைக்கமிட்டி பரிசீலித்தது.இந்நிலையில் சம்பள உயர்வு குறித்த அறிக்கை நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


இதன்பிறகு முதல்வர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில், ''அடுத்த மாதம் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ7,222 கோடி கூடுதல் சுமை ஏற்படும்.2014ம் ஆண்டு ஜூலை முதல் முன்கால அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படும். இந்த சம்பள உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாயும், அதிகபட்சம் 12,000 ரூபாயும் அதிகரிக்கும். இதன்படி குறைந்தபட்ச சம்பளம் ரூ16,500 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ1,20,000 ஆகவும் இருக்கும்'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி