போகி பண்டிகையன்று, தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. போகிபண்டிகை தினமான வரும், 14ம் தேதியன்றும், தேர்வுகள் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள், பெற்றோர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
பொதுவாக, ஆண்டுதோறும் போகி பண்டிகையன்று, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். நடப்பாண்டு, போகி பண்டிகையன்று, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆங்கிலம் இரண்டாம் தாள், பிற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி என, தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பெற்றோர் சிலர் கூறுகையில், 'பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். போகியன்று தேர்வு நடத்தப்படுவதால், வெளியூர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை உற்சாகம் குறைந்துவிட்டது' என்றனர்.
Jan 13, 2016
Home
kalviseithi
போகியன்று அரையாண்டு தேர்வு:மாணவர்கள், ஆசிரியர்கள் சோகம்
போகியன்று அரையாண்டு தேர்வு:மாணவர்கள், ஆசிரியர்கள் சோகம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி