அமைச்சர் உறுதி என்னாச்சு?சத்துணவு ஊழியர் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2016

அமைச்சர் உறுதி என்னாச்சு?சத்துணவு ஊழியர் கேள்வி

'முதல்வருடன் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த அமைச்சர், அதன் பின், எங்களைக் கண்டு கொள்ளவில்லை' என, சத்துணவு ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.சத்துணவு ஊழியர்களின் மாநில மாநாடு, கிருஷ்ணகிரியில் நடந்தது.


இதில், 'சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; சத்துணவு துறையை தனி துறையாக அறிவிக்க வேண்டும்'என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதுகுறித்து, சத்துணவு ஊழியர் சங்க மாநில நிர்வாகி அண்ணாதுரை கூறியதாவது:கோரிக்கைகளுடன் கோட்டை நோக்கி செல்ல முயன்ற சத்துணவு பணியாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 'முதல்வரிடம் பேசி,கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்' என, அமைச்சர் வளர்மதி உறுதி அளித்தார்; இதுநாள் வரைநடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி