TNTET:தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரியர்கள்: ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படாததால் எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2016

TNTET:தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரியர்கள்: ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படாததால் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள்.மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரி யர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் களுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.


மத்திய அரசின் இந்த உத்தரவு கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தாலும் தமிழ கத்தில் அது தொடர்பான அர சாணை 15.11.2011 அன்றுதான் வெளியிடப்பட்டது.மத்திய அரசின் உத்தரவு அம லுக்கு வருவதற்கு முன்பாக அரசுப் பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ பணி நியமன முன்னேற்பாடுகள் தொடங்கியிருப் பின்அத்தகைய ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் 23.8.2010 முதல் 23.8.2012 வரையிலான காலகட்டத்தில் நிய மிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டது. தகுதித் தேர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்ட15.11.2011 முதல் இந்த 5 ஆண்டு கால அவகாசம் கணக்கிடப்படும் என்றும் அறிவிக் கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதியுடன் ஐந்தாண்டு காலக்கெடு முடிவடை கிறது.தமிழகத்தில் கடந்த 2012 ஜூலை மாதம் நடைபெற்ற முதல் தகுதித் தேர்வுக்கு அளிக்கப்பட்ட நேரம் போதாது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து மறு தேர்வு அதே ஆண்டு அக்டோபர் மாதமும், கடைசியாக 2013 ஆகஸ்ட் மாதமும் என கடந்த 4 ஆண்டு களில் 3 தேர்வுகள் மட்டுமே நடத் தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 2 தகு தித் தேர்வுகள் நடத்தப்பட வேண் டும் என்பது விதிமுறை. ஆனால், அதுபோன்று தகுதித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதேநேரத் தில் சிபிஎஸ்இ-யின் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வானது இது வரை 8 முறை நடத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் முழு அளவில் நடைபெற்ற 2 தகுதித் தேர்வுகளிலும் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் கணிசமான எண்ணிக் கையில் தேர்ச்சி பெற்ற போதிலும்இன்னும் 3 ஆயிரம் பேர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணி யில் இருந்துவருகின்றனர். தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத காரணத் தால் அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்திவைக் கப்பட்டிருப்பதுடன் தகுதிகாண் பருவம்முடிந்தும் அவர்கள் இன் னும் பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறும்போது, “ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருந்தால் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புகள் கிடைத் திருக்கும். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை அரசு நீட்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.இன்னொரு தரப்பு ஆசிரியர்கள் கூறும்போது, “தகுதித்தேர்வு தொடர் பான மத்திய அரசின் உத்தரவு வருவதற்கு முன்பு பணி நியமன பணிகள் தொடங்கி அதன்பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளித்தது போல எங்க ளுக்கும் தகுதித் தேர்வு தேர்ச்சியி லிருந்து விலக்கு அளிக்க வேண் டும்” என்று வேண்டு கோள் விடுத் தனர்.இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

39 comments:

  1. தனியார் பள்ளி ஆசிரியர்/ஊழியர் சங்கம் பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. M.A.,M.Sc., M.Ed போன்ற பல பட்டங்கள் பெற்று 5000 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தில் பணி நிரந்தரமும் இல்லாமல் ஓய்வின்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல எதிர் காலத்தை ஏற்படுத்தி தர வேண்டுகிறேன்..

      Delete
    2. மற்றவர்களும் உங்கள் கருத்துக்களை, கஷ்டங்களை பதிவிடுங்கள் , அனைத்தும் சாத்தியமாகும்!

      Delete
  2. 15.11.2011 அன்று தான் இந்த அரசாணை தமிழ் நாட்டில் அமலுக்கு வந்தது. எனவே அதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு வர வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete
  3. Pleace admk not for vote.all teacher apdi vote pots enga death .

    ReplyDelete
  4. any body know group 2 written exam date

    ReplyDelete
  5. any body know group 2 written exam date wen

    ReplyDelete
  6. Replies
    1. no job for even 50% OF passed candidates in tntet2013 what a great exam.idhula 2014,2015 exam pending veraa suuuuper

      Delete
  7. மோகன் அவர்களே இதுவரை உச்சநீதிமன்ற வலைதளத்தில் 27.01.2016க்கான வழக்கு நிலவரத்தில் வழக்கு பற்றிய தகவல் இல்லை..,

    ReplyDelete
  8. SUPREME COURT TET CASE 2013 LISTED ON 27.01.2016 REGISTRAR COURT ONLY

    ReplyDelete
    Replies
    1. Lavanya mam
      There is a talk that u have been called by officials of school education department regarding to release additional list of tet2013 passed candidates for the existing vacancies
      Is it true
      Pl reply

      Delete
    2. Registrar list also no details sir that list can display upto 22.01.2016 Anyway we wait and see what happen..,

      Delete
    3. Registrar list also no details sir that list can display upto 22.01.2016 Anyway we wait and see what happen..,

      Delete
    4. Mr.Arul Muthusamy your mail ID, I will sent the copy

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. arulmuthusamy79@gmail.Com
      நன்றி Unknown sir

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  9. நன்றி Unknown sir தங்களது விளக்கம் கிடைத்தது அதில் உள்ளது பொல் வழக்கு 27.01.2016 வந்தால் நல்லது, அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் என கடவுளை வேண்டுவோம்.

    ReplyDelete
  10. Kalviseithi la athavathu oru article potu nama parapave vechi erukanga

    ReplyDelete
  11. maheshwaran221288@gmail.com
    Case detail anupuga sir please

    ReplyDelete
  12. Any news about tet case please share with me9842682800

    ReplyDelete
  13. within this month end,lab assistant result will come.

    ReplyDelete
  14. Tet case conforma 27 varutha therincha share panuga.

    ReplyDelete
  15. Money 💵 money 💵 money 💵...

    ReplyDelete
  16. Mr.vijayakumar chennai sir where r u tet case enna achu pls

    ReplyDelete
  17. அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் BTஆசிரியர் கலந்தாய்வின் மூலம் பணியிட மாற்றம் பெற முடியுமா?
    தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே

    ReplyDelete
  18. Replies
    1. Anybody know adw pg posting fill panvangala?

      Delete
    2. Anybody know adw pg posting fill panvangala?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி